Judgment of a Family Man - ஒரு சின்ன கதை

ஒருவன் தன் மனைவியை விவாகரத்து செய்த பிறகு தன் வீட்டிற்கு வந்தான்.

தன் அறையின் ஒரு மூலையில் ஒரு பெட்டியில் கொஞ்சம் காலியான மது பாட்டில்கள் இருப்பதை அவன் பார்த்தான் .

அதில் இருந்து ஒரு பாட்டில் எடுத்து கோபத்தில் தூர எறிந்து கொண்டு அவன் கூறினான் : “என் மனைவி என்னை விட்டு போகக் காரணம் நீ தான் “.

மீண்டும் அடுத்த பாட்டில் எடுத்து எறிந்து விட்டு அவன் கூறினான் : " எனக்கு குழந்தைகள் இல்லாததுக்கு காரணம் நீதான் “.

மறுபடியும் அடுத்த பாட்டில் எடுத்து எறிந்துவிட்டு அவன் சொன்னான் : " என் வேலை போகக் காரணம் நீ தான் “.

மீண்டும் அவன் அடுத்த பாட்டில் எறிய எடுத்ததும் அவனுக்கு புரிந்தது, அது லேபிள்கூட கிழிக்காத சரக்கு உள்ள முழுப்பாட்டில் .

அப்ப அவன் சொன்னான் : " நீ இந்த சைடு ஒதுங்கி நில்லு🍾🍾🍾 .. எனக்குத்தெரியும், உனக்கு இந்த சம்பவத்துல ஒரு பங்கும் இல்லனு …."‘🤣🤩

ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது ..!!😜

Cheers,
RM…
Raghavan alias Saravanan Muthu
03 Aug 2022 | Wed | 19:37:50 PM IST